fbpx

சிவகங்கை அருகே…..! சட்ட விரோத மது விற்பனையை தடுக்க தவறிய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்….!

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே மது கூடங்களுடன் கூடிய 2️ அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், மதுக்கடை திறக்கப்படாத சமயங்களில் மது கடைகளிலும், அதனை ஒட்டி திறந்தவெளியிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.

இதனை முன்னிட்டு சென்ற வாரம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு மது கூடங்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதோடு திறந்தவெளியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவரை கைது செய்தனர் காவல்துறை சார்ந்தவர்கள்.

இதனைத் தொடர்ந்து, சட்ட விரோத மது விற்பனையை தடுக்க தவறியதற்காக சாலை கிராமம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோவை சிவகங்கை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவு பிறப்பித்தார்.

இதைக் கேள்வியுற்ற ஜான் பிரிட்டோ காவல் நிலையத்தில் உள்ள ஓய்வு அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரை சக காவலர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இத்தகைய நிலையில், அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து இராமநாதபுரம் சரக டிஐஜி துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Next Post

கும்பகோணம் அருகே இளைஞரை தாக்கிய மூவர் அதிரடி கைது…..! திமுக செயலாளரை தேடும் காவல்துறை…..!

Wed May 31 , 2023
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவரஞ்சுழி எம் ஜி ஆர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி என்பவரின் மகன் ரஞ்சித்(25). இவர் மற்றும் இவருடைய உறவினர் விஷ்ணு உள்ளிட்ட இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவலஞ்சுழி கடை தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மகன் சிரஞ்சீவி (23), கணேசன் என்பவரின் மகன் அன்பரசன்( 30), காமராஜ் மற்றும் இவருடைய […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like