fbpx

அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் “Silent Heart Attack”..! காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன..!

Silent Heart Attack : அறிகுறிகள் இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம். இது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பரிசோதனைகள் செய்யும் போது மக்கள் இதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். சைலண்ட் ஹார்ட் அட்டாக் எவ்வளவு ஆபத்தானது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

அமைதியான மாரடைப்பை அடையாளம் காண்பது கடினம். ஏனென்றால், அமைதியான மாரடைப்பு ஏற்படும் போது, ​​உடலில் எந்த அறிகுறியும் உணரப்படுவதில்லை. உடலில் சில சிக்னல்களைக் கொடுத்தாலும், அவை மிகவும் சாதாரணமானவையாக இருக்கும். இதனால் இவற்றை யாரும் பெரிதாக எண்ணுவதில்லை. ஆனால் அறிகுறிகளுடன் வரும் மாரடைப்பு எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு அமைதியான மாரடைப்பும் ஆபத்தானது. இந்த சூழ்நிலையில், உங்கள் இதயம் சேதமடைகிறது. இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கல் தடைப்படும் போது, மாரடைப்பு ஏற்படுகிறது. சைலண்ட் ஹார்ட் அட்டாக் எந்த நேரத்திலும் வரலாம். பல நேரங்களில் அமைதியான மாரடைப்பு நிகழ்வுகள் தூங்கும் போது ஏற்படும்.

சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏன் ஏற்படுகிறது? உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் காரணமாக, கரோனரி தமனிகளில் படிந்திருக்கும் பிளேக் உருவாகிறது. பிளேக்கில் இரத்த உறைவு ஏற்பட்டால், அது ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தை இதய தசையை அடைவதைத் தடுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் மாரடைப்பு ஏற்படுகிறது.

சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான காரணங்கள்: அதிக எடை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சத்து, உயர் இரத்த சர்க்கரை, புகையிலையை அதிகமாக உட்கொள்வது போன்றவை சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான காரணங்களாக உள்ளன

சைலண்ட் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் என்ன? அமைதியான மாரடைப்பு ஏற்படும் போது பல நேரங்களில் எந்த அறிகுறிகளும் உணரப்படுவதில்லை. மேலும் மார்பு அல்லது மேல் முதுகில் தசை வலி, தாடை, கைகள் அல்லது மேல் முதுகில் வலி உணர்வு, மிகவும் சோர்வான உணர்வு மற்றும் அஜீரண உணர்வு, கடுமையான மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம், மேல் உடலில் அசௌகரியம், குளிர் வியர்வை, மிகவும் சோர்வாக உணர்தல், குமட்டல் உணர்வு போன்றவை சைலண்ட் ஹார்ட் அட்டாக்கிற்கான அறிகுறிகளாக உள்ளன.

சைலண்ட் ஹார்ட் அட்டாக் யாருக்கு அதிகம் ஏற்படும்? ஒரு ஆய்வின்படி, சுமார் 50% முதல் 80% மாரடைப்புகள் அமைதியாக இருக்கும். சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஆபத்து குறிப்பாக பெண்களுக்கு அதிகம். சில நேரங்களில் மன அழுத்தம், அதிகப்படியான உடல் செயல்பாடு அல்லது குளிர்ச்சியின் காரணமாக அமைதியான மாரடைப்பு ஏற்படலாம்.

Read More: Processed Foods: பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிருக்கு ஆபத்து.!! பதற வைக்கும் ஆய்வு முடிவுகள்.!!

Baskar

Next Post

அட்சய திருதியை நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம்…! எப்போது குறையும் விலை?

Sat May 11 , 2024
பொதுவாக அட்சய திரிதியை நாளில் மக்கள் ஆர்வத்துடன் தங்க நகை வாங்குவது வழக்கம். அதன்படி, தங்க நகைக் கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்து ஒரு சரவன் 54000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செழிப்பு நன்மை கிடைக்கும், அதே நேரத்தில் பொருட்கள் நிறைய வந்துசேரும் என்பது ஐதீகம். […]

You May Like