பொதுவாக ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவு, உடை , உறைவிடம், தூக்கம் ஆகியவை அவசியம். ஒரு மனிதன் ஒரு நாள் இரவு சரியாக தூங்கவில்லை என்றாலும் அவன் ஆயுளில் மூன்று நாட்கள் குறைகிறது. அது மட்டுமல்லாமல் அவனால் மறுநாள் நிம்மதியாக எந்த வேலையும் பார்க்க முடியாது. தூக்கம் கெட்டுப் போனால், உடலில் பல தொல்லைகள் இருக்கும். மேலும், தூங்கும்போது அடைக்கப்பட்ட அறையில் ஒருவர் தூங்கினால் உடலில் என்னென்னெ பாதிப்புகள் வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அடைக்கப்பட்ட அறையில் தூங்கினால் ஆபத்து…
— தூக்கம் என்பது நம் அனைவருக்கும் ஆரோக்கியமாய் நோயின்றி வாழ முக்கியமான ஒன்று.
— அதுவும் பூட்டிய அறையில் தூங்காமல் நல்ல காற்றோட்டமான அறையில் தூங்கினால் பல நோய்கள் நம்மை நெருங்காது.
— அடைக்கப்பட்ட அறையில் தூங்காமல், நல்ல காற்றோட்டமான அறையில் தூங்கினால் நம்முடைய உடலுக்கு தேவையான ஆக்சிஜன் நம் உடலுக்கு கிடைக்கும்.
— அதனால் நம் உடலில் உள்ள நுரையீரலும் சிறுநீரகமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் .
— ஆனால், இன்று நாகரீகம் என்ற பெயரில் ஏ.சி. ரூமில் சிறு அறையில் தூங்குகிறோம். இப்படி தூங்கும்போது நம் உடலில் 4 மணி நேரத்தில் 10 சதவிகிதத்திற்கும் கீழே ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடுகிறது.
— இதனால் நம் நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால், அது சிறுநீரகத்தை நாடுகிறது.
— இதனால் சிறுநீரகமும் சேர்ந்து அதிகமாக செயல்பட்டு அதற்கு அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் சரியாக செயல்படாமல் கிட்னி பாதிப்பிற்கு உள்ளாகிறது.