fbpx

பாம்பு கனவும் பரிகார பூஜையும்..!! பூசாரியின் பேச்சை நம்பி நாக்கை பறிகொடுத்த அரசு அதிகாரி..!!

ஈரோடு அருகே கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியதால், பரிகாரம் செய்யப் பாம்பிடம் நாக்கை கொடுத்த அரசு அதிகாரியின் நாக்கு பறிபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 54 வயதான அரசு அதிகாரி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியுள்ளது. அரசுப்பணி போக மீதமுள்ள நேரத்தில் இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கனவில் அடிக்கடி பாம்பு தோன்றுவது குறித்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால், இருவரும் அப்பகுதியில் உள்ள ஜோசியரை அணுகி இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது, பாம்பு கனவில் வருதற்கு பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் சாமியாரிடம் பரிகார பூஜை செய்யுமாறு அந்த ஜோசியர் ஆலோசனை வழங்கி உள்ளார். அதன்பேரில் அந்த பூசாரியை அணுகியபோது, கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை வைத்து நாகசாந்தி பூஜை செய்ய வேண்டும் என கூறி அந்த பூஜையை செய்துள்ளார்.

பாம்பு கனவும் பரிகார பூஜையும்..!! பூசாரியின் பேச்சை நம்பி நாக்கை பறிகொடுத்த அரசு அதிகாரி..!!

அப்போது, பூஜையின் இறுதியில் பாம்பின் முன் அரசு அதிகாரியின் நாக்கை நீட்டி பரிகாரம் செய்யுமாறு பூசாரி கூறியுள்ளார். இதனை நம்பி அதிகாரியும் பாம்பின் முன் சென்று தனது நாக்கை நீட்டியுள்ளார். இரண்டு முறை நாக்கை நீட்டிய போது அமைதியாக இருந்த பாம்பு மூன்றாவது முறை அவர் நாக்கை நீட்டிய போது திடீரென அவரது நாக்கை பதம் பார்த்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி, விஷம் ஏறாமல் இருக்க வேண்டும் என நினைத்து கத்தியை எடுத்து அதிகாரியின் நாக்கை அறுத்துள்ளார். இதில், நாக்கு துண்டாக அதில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறி அரசு அதிகாரி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

பாம்பு கனவும் பரிகார பூஜையும்..!! பூசாரியின் பேச்சை நம்பி நாக்கை பறிகொடுத்த அரசு அதிகாரி..!!

இதனையடுத்து சிகிச்சைக்காக அவரை ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் செந்தில் குமரன் அடங்கிய குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான போராட்டங்களுக்கு பிறகு அந்த அரசு அதிகாரி தற்போது உயிர் பிழைத்துள்ளார். பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமே தவிர மூடநம்பிக்கைகளையும் வீட்டு வைத்தியத்தையும் செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Chella

Next Post

சம்பளம் கேட்டதால் 5 மணி நேரம் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்..!! வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு..!!

Sat Nov 26 , 2022
ராஜஸ்தானில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவரை கொடூரமாக தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிரோஷி மாவட்டத்தை சேர்ந்தவர் 38 வயதான பாரத் குமார். இவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர், அப்பகுதி முழுவதும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாரத் குமார் வேலை பார்த்தபோது, அவரது வேலைக்கு ஊதியமாக ரூ. 21 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால், அந்த […]
சம்பளம் கேட்டதால் 5 மணி நேரம் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்..!! வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு..!!

You May Like