fbpx

டீ கடையில் இவ்வளவு லாபமா? குறைந்த முதலீட்டில் எப்படி ஆரம்பிக்கலாம்?

பெரும்பாலானோர் சொந்தமாக ஒரு தொழிலைச் செய்து சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் பணம் இல்லாததால் அவர்களால் அதைத் தொடங்க முடியாமல் போகலாம். இருப்பினும், குறைந்த பணத்தில் நீங்கள் இந்த தேநீர் கடை வைத்து லாபம் பார்க்கலாம்.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தேநீர் மிகவும் விரும்பப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேநீர் கடைகள் காணப்படுகின்றன. அப்படி நீங்களும் ஒரு தேநீர் கடையைத் தொடங்கலாம். சொந்தமாக ஒரு தொழில் செய்து சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இந்தத் தொழிலும் கை கொடுக்கும்.சொந்தமாக டீ கடை தொழிலைத் தொடங்க திட்டமிட்டால் வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்குள் கடையைத் திறக்கலாம். நம் நாட்டில் மிகக் குறைந்த முதலீட்டில் எளிதாக டீக்கடை திறக்கலாம். ஒரு சிறிய டீ கடையைத் தொடங்குவது மிகவும் லாபகரமாக இருக்கும்.

தேநீர் இல்லாமல் மக்களின் காலை நேரம் முழுமையடையாது. வயது வந்த நபர்கள் தங்களது தினசரி வாழ்க்கை ஓட்டத்தில் தினமும் சராசரியாக இரண்டு முதல் மூன்று கப் தேநீர் அருந்துகிறார்கள். சில நேரங்களில் அது ஒரு நாளில் 4 முதல் 5 கப் வரை கூட செல்கிறது. உணவு உண்ணாமல் வெறும் டீயை மட்டுமே சாப்பிட்டு காலத்தைக் கடத்துபவர்களும் உண்டு.

தேநீர் கடையை ஆரம்பிப்பது எப்படி?

20 ஆயிரம் ரூபாய் முதலீடு, பாத்திரங்கள், அடுப்பு, கண்ணாடி கிளாஸ், பால், தேயிலை, மசாலா பொருட்கள் போன்றவை தேவைப்படும். இது தவிர, வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து டீ சாப்பிட பெஞ்ச், சேர் போன்ற வசதிகளும் தேவை. டீ தவிர, பிஸ்கட் மற்றும் டீயுடன் சாப்பிட வேண்டிய பொருட்களை கடையில் வைத்தால் நல்லது. அதன் மூலம் விற்பனையும் வருமானமும் அதிகரிக்கும். மேலும் கண்ணாடி டம்ப்ளர், சில்வர் டம்ப்ளர், பீங்கான் கோப்பைகள், காகித கப்கள் போன்றவற்றின் மூலமாக டீ விற்பனை செய்யலாம். ஒரு தேநீரின் விலை பொதுவாக 10 ரூபாய். ஆனால் நீங்கள் டீக்கடையை திறக்கும் இடத்துக்கு ஏற்ப டீயின் விலை என்ன என்பதை முடிவு செய்யலாம். அதே நேரத்தில், தேயிலை வியாபாரத்தை ஆரம்பித்த பிறகு அதையும் படிப்படியாக அதிகரித்து, காலை உணவு, இரவு உணவு போன்றவற்றையும் சேர்க்கலாம். அதன் மூலம் உங்களுடைய லாபத்தை மேலும் அதிகரிக்கலாம்.

Read More: Annamalai: மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை முடக்கிய ஊழல் திமுக அரசு…!

Rupa

Next Post

கோடையில் தொல்லை தரும் எறும்புகள்!! விரட்டியடிக்க சூப்பர் டிப்ஸ் இதோ!!

Thu May 16 , 2024
வெயில் காலம் வந்தாலே எறும்புகளின் படையெடுப்பு தொடங்கிவிடும். அவை மளிகைப் பொருள், திண்டபண்டங்கள் என புகுந்து ஒரு கை பார்த்துவிட்டுதான் வெளியேறும். இந்த எறும்புகள் மிகப்பெரிய தொல்லையாக மாறிவிடுகின்றன. வீடுகளில் காணப்படும் சிற்றெறும்புகளும், சாமி எறும்பு என்றழைக்கப்படும் கருப்பு எறும்புகளும் பொதுவாக மனிதர்களுக்கு ஆபத்தற்றவையாக இருந்தாலும், உணவுப் பொருட்களுக்கும் குழந்தைகளுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடியவை. எனவே முடிந்த வரை எறும்புகளை வீடுகளுக்குள் வரவிடாமல் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. எறும்பு விரட்டியாக செயல்படும் […]

You May Like