தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு 6 பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ரேஷன் தொகுப்பில் நான்கு பொருட்களுக்குப் பதிலாக தற்போது ஆறு பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 100 ரூபாய் செலுத்தி இதை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பரிசுத் தொகுப்பில் 1 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் சமையல் எண்ணெய், அரை கிலோ ரவா-சனா பருப்பு, மாவு மற்றும் அவல் வழங்கப்படும். கூடுதல் பொருட்கள் வழங்கும் இந்த திட்டத்திற்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
திரிபுரா அரசு:
துர்கா பூஜையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு மானிய விலையில் பரிசுக்கள் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக திரிபுரா உணவு வழங்கல் துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த பரிசு பொருட்கள் வழங்கும் மாணிக் சாஹா திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறினார்.
பரிசு பொருட்களில் ஒரு லிட்டர் கடுகு எண்ணெய், ஒரு கிலோ பருப்பு, 2 கிலோ மாவு, 1 கிலோ சர்க்கரை, 500 கிராம் ரவா மற்றும் ஆட்டா ஆகியவை இருக்கும். கடுகு எண்ணெய் ரூ.113/லிட்டர் என்ற சிறப்பு விலையில் விற்கப்படும். முன்னதாக, ரேஷன் கடைகளில் கடுகு எண்ணெய் லிட்டருக்கு 128 ரூபாய்க்கு விற்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது, ஆனால் பின்னர் துறை கூடுதலாக 15 ரூபாய் அரசு மானியம் வழங்கியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், துர்கா பூஜையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு மானிய விலையில் பரிசுக்கள் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ஆண்டுக்கு நான்கு முறை மானிய விலையில் கடுகு எண்ணெய் வழங்கப்படும். இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கடுகு எண்ணெய் மானிய விலையில் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் உணவுத் துறையின் சொந்த கடனிலிருந்து ரூ.5,000 வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் மாநில அரசுக்கு கூடுதலாக ரூ.30 லட்சம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.