fbpx

SSLV – D1 ராக்கெட் மிஷன் தோல்வி..! இனி எந்த பயனும் இல்லை..! இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட SSLV – D1 ராக்கெட்டின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த செயற்கைக்கோள்களால் இனி எந்த பயனும் இல்லை என அறிவித்துள்ளது.

இந்தியாவின் எஸ்.எஸ்.எல்.வி. (SSLV) ரக முதல் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை போல் பெரிய ரகமாக இல்லாமல் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த SSLV ரக ராக்கெட்டை ஏவுவதற்கு 6 மணி நேரம் கவுண்ட்டவுன் போதும் என இஸ்ரோ அறிவித்தது. அதன்படி, இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி, காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த SSLV ரக ராக்கெட்டில், 145 கிலோ எடை உடைய, பூமியை கண்காணிக்கக் கூடிய இ.ஓ.எஸ் – 02 செயற்கைக்கோள் மற்றும் 8 கிலோ எடையிலான ஆசாதிசாட் செயற்கைக்கோள் ஆகியவை விண்ணிற்கு அனுப்பப்பட்டன.

SSLV ராக்கெட் மிஷன் தோல்வி..! இனி எந்த பயனும் இல்லை..! இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்த ராக்கெட் ஏவுவதற்கு தங்களின் பங்களிப்பை அளித்த கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளை, ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஏவப்பட்ட ராக்கெட்டின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த செயற்கைக்கோள்களால் இனி எந்த பயனும் இல்லை என அறிவித்துள்ளது. ராக்கெட் மிஷன் தோல்விக்கு சென்சார் செயலிழப்பே காரணமாக இருக்கலாம் என்றும், மேலும் இதை பற்றி இஸ்ரோ ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

Chella

Next Post

ஆலந்தூர் மெட்ரோ மேம்பாலத்தில் சாலை வழிகாட்டி பெயர் பலகை சரிந்து விழுந்து ஒருவர் பலி..!

Sun Aug 7 , 2022
சென்னை, ஆலந்தூர் மெட்ரோ அருகே மேம்பாலத்தில் உள்ள சாலை வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்ததால் ‌பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பெயர் பலகை விழுந்துள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த இரண்டு பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]

You May Like