fbpx

#திருப்பத்தூர்: மது போதையில் நண்பரையே குத்தி கிழித்து கொலை செய்த கொடூரம்..! 

திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள கவுதமபேட்டையில்  அண்ணாமலையின் மகன் முகேஷ்வரன்(21) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது‌.

இதனையொட்டி நண்பர் அஜய்பாலா, விஜய் பிரசாந்த் ஆகியோருக்கு நேற்று முந்தைய தினத்தில் முகேஷ்வரன் மது விருந்து வைத்துள்ளார். மூவரும் சேர்ந்து அருகில் உள்ள பூங்காவில் நள்ளிரவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். 

இதனிடையில் முகேஷ்வரன் மற்றும் விஜய் பிரசாந்த் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை யொருவர் சரமாரி தாக்கிக் கொண்டனர். விஜய் பிரசாந்த் தாக்கியதால் முகேஷ்வரனுக்கு கழுத்தில் காயம் பட்டது. அதன் பின்னர் உடனே அவர் கத்தியால் விஜய் பிரசாந்தின் வயிற்றில் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுபற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Baskar

Next Post

#மதுரை : அழகிய நிலையில் முட்புதருக்குள் கிடந்த ஆண் சடலம்..!

Tue Dec 13 , 2022
மதுரை மாவட்ட பகுதியில் உள்ள திருமங்கலம் விமான நிலையத்திற்கு அருகே தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முட்புதருக்குள் ஆய்வு செய்தபோது உடல் ஒன்று அழுகிய நிலையில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர். […]

You May Like