fbpx

செம வாய்ப்பு…!மத்திய அரசுப் பணியாளர் தேர்வுக்கு 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் உள்ளே…!

பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

MTS எனப்படும் பன்னோக்கு தொழில்நுட்பம் சாராத பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு-2022 (நிலை-1)-ஐ மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கணினி வழியில் நடத்தவுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான ssc.nic.in-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.02.2023 ஆகும்.

தேர்வுக்கான கட்டணத்தை பிப்ரவரி 19-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். புகைப்படத்தில் தொப்பி, மூக்குகண்ணாடி அணிந்திருக்கக் கூடாது, தெளிவாக இருக்க வேண்டும்.இந்த தகவலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் துணை இயக்குனர் கந்தன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு..? பரபரக்கும் அரசியல்களம்..

Sat Jan 21 , 2023
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பை முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளது.. ஆனால் அதே நேரத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவும் […]

You May Like