அண்டார்டிகாவின் ஒரு தளத்தில் சிக்கித் தவிக்கும் விஞ்ஞானிகள் குழு ஒன்று, தங்கள் சக ஊழியர்களில் ஒருவரின் அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி மின்னஞ்சல் மூலம் உதவி கோரியுள்ளது. டெய்லி மெயில் செய்தியின்படி, அண்டார்டிகாவில் உள்ள சானே IV ஆராய்ச்சி நிலையத்தில் 10 மாதங்கள் தங்கியுள்ள தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள், தங்கள் சக ஊழியர்களில் ஒருவர் மற்றொரு உறுப்பினரைக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறினர்.
கடந்த வாரம், அந்த குழுவைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர், சக குழு உறுப்பினர் ஒருவர் தங்களைத் தாக்கியதாகவும், மேலும் அச்சுறுத்தல்களை விடுப்பதாகவும் கூறி, மின்னஞ்சலை அனுப்பினார். மேலும் சக ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டினர். குற்றம் சாட்டப்பட்ட நபர் தங்களை உடல் ரீதியாகத் தாக்கியதாக தெரிவித்தனர்,
இது தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் பணியிட விதிமுறைகளை கடுமையாக மீறுவதாகும். மேலும், அந்த நபர் கொலை செய்வதாக மிரட்டியதாகவும், பயம் மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். தனது சக ஊழியரின் அதிகரித்து வரும் மோசமான நடத்தை குறித்து கவலை தெரிவித்தார், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்த சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு, தென்னாப்பிரிக்காவின் சுற்றுச்சூழல் அமைச்சர் டியான் ஜார்ஜ், நிலைமையை மதிப்பிடுவதற்காக குழுவுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதாகக் கூறினார். அண்டார்டிகாவில் உள்ள கடுமையான வானிலை, மனிதர்களோ அல்லது விலங்குகளோ இல்லாததுடன் இணைந்து, ஆராய்ச்சி குழுவை முற்றிலுமாக தனிமைப்படுத்தியுள்ளது.
Read more: இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே…! தங்கம் விலை மேலும் உயர்வு…! எவ்வளவு தெரியுமா..!