fbpx

பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை; கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் பசுவந்தனை சில்லாங் குளத்தில் இயங்கிவரும் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறையில் அந்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை கொண்டார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தகவல் அறிந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு தெளிவான தகவல் தரவில்லை என மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மாணவியின் உறவினர்கள் திடீரென மாணவி தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவி உயிரிழந்த அன்று பணியில் இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையினரிடம் மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட காவல் சூப்பிரெண்டு பாலாஜி சரவணன் நேரில் விசாரணை செய்தனர். கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட தனியார் பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜும் ஆய்வு செய்தார். அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மாணவி எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது என கூறினார்.

Rupa

Next Post

சைக்கிள் ஓட்டத் தெரியுமா? …. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை ..

Wed Sep 21 , 2022
சைக்கிள் ஓட்டத்தெரிந்தால் போதும் மாதம் 50000 ரூபாய் சம்பளத்தில் தமிழக அரசு வேலை உங்களுக்காக காத்திருக்கு… திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அரசுப் பணிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. வருகின்ற 14.10.22 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது. நிறுவனம் – திண்டுக்கல் மாவட்ட ஊரக […]

You May Like