fbpx

அசத்தல்…! 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை… கல்வி உதவித் தொகை உயர்வு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் செய்தி குறிப்பில்; விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, ஆளுநர் தலைமையில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் கல்வி மேம்பாட்டு நிதியுதவியை 2022-23ம் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்கிட முடிவு செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.500-லிருந்து 2000 ரூபாயாவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை 800-லிருந்து 4,000 ரூபாயாவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000-லிருந்து 5,000 ரூபாயாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500-லிருந்து 6,000 ரூபாயாகவும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Job Alert..!! தமிழக அரசின் சுகாதார அலுவலர் பணி..!! ரூ.2,09,200 வரை சம்பளம்..!! உடனே முந்துங்கள்..!!

Mon Nov 14 , 2022
தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் (Health Inspector) பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர்: சுகாதார அலுவலர் (Health Inspector) காலியிடங்கள்: 12 சம்பளம்: ரூ.56,900 முதல் ரூ.2,09,200 வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 19.11.2022 கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150 மற்றும் […]
#Job Alert..!! மாவட்ட மகளிர் நல வாரியத்தில் பெண்களுக்கு வேலை..!! நாளையே கடைசி..!!

You May Like