fbpx

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை அரசிடமே செலுத்த வசதி

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை கல்லூரியிடம் அல்லாமல் நேரடியாக அரசிடமே செலுத்தலாம் என, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார்.

மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் மருத்துவர்கள் கலந்தாய்வுகள் குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில், இயக்குநர் நாராயண பாபு கூறுகையில் ’’  மருத்துவர்கள் கலந்தாய்வு 36 மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்றது. இதில் 1553 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கான கலந்தாய்வில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் 90 முதல் 95% இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

ஊட்டி, திருப்பூர், நாகை போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 100 சதவிகிதம் மருத்துவர்கள் நிறப்பட்டுள்ளனர்.கொரோனா காலக்கட்டத்தில்  மருத்துவர்கள் பலர் பணி சூழ்நிலை கருதி பல்வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டியிருந்தனர்.தற்போது மீண்டும் அவர்களைப் பழைய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான கலந்தாய்வு குறித்த தகவல் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும், ஒன்றிய அரசு நீட் தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களை அனுப்பியவுடன் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெற்றோர்களிடம் அதிகப் பணம் வசூலிப்பதைத் தடுக்க புதிய  நடவடிக்கை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.என கூறிய அவர் இந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஒட்டுமொத்த கட்டணங்களையும் அரசிடமே நேரடியாக செலுத்தலாம், கல்லூரியில் செலுத்தத் தேவையில்லை என கூறினார்.

Next Post

ராணியின் உடல் இறுதிச்சடங்கில் என்னவெல்லாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ?

Wed Sep 14 , 2022
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக ஸ்காட்லாந்தில் காலமானார். அங்கிருந்து லண்டன் வந்தடைந்துள்ள அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்கிங்காம் அரண்மனை ஊழியர்கள் செய்து வருகின்றார்கள். என்னென்ன முன்னேற்பாடுகள் : 1947ம் ஆண்டு இளவரசர் பிளிப்பை ராணி எலிசபெத் வின்ட்ஸ்டரில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். 18ம் நூற்றாண்டு முதல் அரச குடும்பத்தினரின் இறுதிச் […]

You May Like