தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற்றது. 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 30ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த தேர்வுகள் ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, கடந்த 29ஆம் தேதி முதல் 1-9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 30 நாட்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் வானிலை மிக மோசமாக சுட்டெரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 100 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவானது. அந்த அளவிற்கு மோசமான வானிலை நிலவிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்களுடன் ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இன்று அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இன்றைய ஆலோசனைக்கு பின்பாக அவர் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து அறிவிப்பார்.