fbpx

Students Scholarship 2024: 9 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.4000 கல்வி உதவித்தொகை…!

Students Scholarship 2024: அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை.

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக் கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை தமது வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை EMIS (Educational Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

English Summary : Students Scholarship 2024: Scholarship of Rs.4000 for Class 9 and 10 Govt.

Vignesh

Next Post

Sterlite Plant: மக்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் பாதுகாக்க வேண்டும்!… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் வாதம்!

Thu Feb 22 , 2024
Sterlite Plant:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிபுணர் குழு அமைத்து அதன் பரிந்துரைகளின்படி செயல்பட அனுமதித்தாலும், நிபந்தனைகளை, ஆலை நிர்வாகம் பூர்த்தி செய்யும் என்பதை நம்ப முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் இன்று நடைபெறவுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2020ல் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. […]

You May Like