தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதேபோல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றன. இதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்வுத் துறை, பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இந்த மாதம் 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தலா 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களில் செய்முறைத் தேர்வுகளை இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து 10 லட்சம் பேர் எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.