சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களே தற்கொலை செய்து கொள்வதை பார்க்க முடிகிறது.. இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஸ்ரீவான் சன்னி என்ற மாணவர் சென்னை ஐஐடியில், முதுநிலை ஆராய்ச்சி படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.. சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படித்து வந்த அவர், இன்று தற்கொலை செய்து கொண்டார்.. மன உளைச்சல் காரணமாகவு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது..
இதே போல் மற்றொரு ஐஐடி மாணவரும், அதிக அளவிலான தூக்க மாத்திரையை எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இந்த சம்பவங்கள் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. எனினும் மாணவர் இறப்புக்கான காரணம் குறித்தும், தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.. இதுகுறித்து ஐஐடி நிர்வாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..