fbpx

5-ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதின் பின்னணி…! மத்திய இணை அமைச்சர் தகவல்…!

மிகவும் குறைந்த செலவு விகிதத்துடன் இந்திய தொலைத் தகவல் வலைப்பின்னல் இப்போது உலகிலேயே இரண்டாவது பெரியதாக உள்ளது. மோடி அரசின் சந்தைக்கு உகந்த கொள்கைகளால் இந்த வளர்ச்சி ஊக்கம் பெற்றுள்ளது என்று மத்திய இணையமைச்சர் தேவுசின் சௌஹான் தெரிவித்தார். தொழில்துறைக்கு “எளிதாக வணிகம் செய்தல்”, ஊரகம் மற்றும் தொலைதூர பகுதிகளில் வாழ்வோரையும் உள்ளடக்கி அனைத்து மக்களுக்கும் “வாழ்க்கையை எளிதாக்குதல்”, “தற்சார்பு இந்தியா” என்ற 3 தூண்களின் அடிப்படையில் நரேந்திர மோதி தலைமையின் கீழ், தொலைத் தகவல் தொடர்பு துறையில் இந்தியாவின் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த சீர்திருத்தங்கள் ஆரோக்கியமான போட்டியை மேம்படுத்துவதாக, நுகர்வோர் நலனை பாதுகாப்பதாக, பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதாக, முதலீட்டுக்கு ஊக்கமளிப்பதாக, தொலைத் தகவல் தொடர்பு சேவை முன்னுரிமை மீதான ஒழுங்குமுறை சுமையை குறைப்பதாக இருக்கின்றன என்றார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, “தொலைத் தகவல் தொடர்புத் துறையின் ஒழுங்குமுறை மற்றும் கொள்கை அம்சங்கள்” என்ற மையப் பொருளுடன் மண்டல தரப்படுத்துதல் அமைப்பின் கூட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 2022 இன்று முதல் 12 வரை சர்வதேச தொலைத் தகவல் தொடர்பு சங்கத்தின் ஆசியா – ஓஷியானா மண்டல பிரிவு ஆய்வுக்குழு 3-ன் 4 நாள் கூட்டம் நடைபெறும்.

Vignesh

Next Post

தினமும் ரூ.238 முதலீடு செய்தால்.. ரூ.54 லட்சம் பெறலாம்.. அசத்தல் திட்டம்..

Tue Aug 9 , 2022
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐச்.சி (LIC) நாடு முழுவதும் உள்ள பாலிசிதாரர்களுக்கு பல்வேறு பாதுகாப்பான திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக ஓய்வூதியம் அல்லது குழந்தைகளின் திருமணத்திற்கு உதவும் வகையில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன… அத்தகைய பிரபலமான எல்ஐசி திட்டங்களில் ஒன்று எல்ஐசி ஜீவன் லப் பாலிசி. இந்த காப்பீட்டுத் திட்டம் பிப்ரவரி 1, 2020 அன்று எல்ஐசியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த பாலிதாரரர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், […]
LIC வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியான செய்தி..!! இனி அனைத்தும் வாட்ஸ் அப்பில்..!! இன்று முதல் அறிமுகம்..!!

You May Like