fbpx

இப்படி ஒரு உத்தரவா..? இனி பெண்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது..!! புதிய உத்தரவால் அதிர்ச்சி..!!

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த வகையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்துவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும், தற்பொழுது உள்ள குழந்தைகள் செல்போன் இல்லமால் சாப்பிடுவது கூட இல்லை. அடம்பிடித்து எப்படியாவது செல்போனை பெற்றோரிடம் இருந்து வாங்கிவிடும். அந்த அளவிற்கு நம் வாழ்வில் ஒன்றாக செல்போன் மாறிவிட்டது.

அப்படி இருக்கும் இந்த காலகட்டத்தில், திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக காதலர்களுடன் வீட்டை விட்டு ஓடுவதைத் தடுப்பதற்காகவும், சாதி மறுப்பு திருமணம் போன்றவை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குஜராத் தாக்கூர் சமூகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், குஜராத் தாக்கூர் சமூகம் திருமணங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்களையும் கொண்டுள்ளது. அதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆணோ அல்லது பெண்ணோ திருமணத்தை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திருமண விழாக்களில் DJ பார்டிகள் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெற்றோர்களே உஷார்..!! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!! இனி குழந்தைகளை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க..!!

Tue Feb 21 , 2023
தெருநாய்கள் கூட்டம் ஒன்று 5 வயது சிறுவனை கடித்துக் கொன்ற நெஞ்சை பதற வைக்கும் துயர சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற 5 வயது சிறுவன் தனது தந்தையுடன் சென்ற போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த துயர சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் 5 வயது சிறுவன் தனியாக நடந்து செல்கின்றான். அப்போது திடீரென […]
பெற்றோர்களே உஷார்..!! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!! இனி குழந்தைகளை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க..!!

You May Like