fbpx

சவுக்கு சங்கருக்கு திடீர் நெஞ்சுவலி..!! தற்போது எப்படி இருக்கிறார்..? விரைவில் வெளியாகும் மருத்துவ அறிக்கை..!!

யூடியூபர் சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் அடுத்தடுத்து கஞ்சா உள்ளிட்ட வழக்கிலும் சிக்கியதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால், சென்னை கமிஷனரின் குண்டர் சட்ட உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

இதைத்தொடர்ந்து தேனி எஸ்.பியின் பரிந்துரையின் பேரில் மீண்டும் சவுக்கு மீது 2-வது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆனால், அவரின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது, சவுக்கு மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, வெளியே வந்த சவுக்கு சங்கர் “உண்மையை பேச அஞ்சப்போவதில்லை. நான் உண்மையை கூறினேன். அதனால், புழல் சிறையில் இருந்து மதுரை அழைத்துச் சென்று இரண்டாவது முறையாக கைது செய்தனர். உண்மையை கூறியதன் காரணமாக என் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தாயாரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

முன்பு இருந்தது போல அதே வீரியத்துடன் தொடர்ந்து செயல்படுவேன். சில காலங்களுக்கு பிறகு சவுக்கு மீடியா மீண்டும் இயங்கும். கோவை சிறையில் எனது கை உடைக்கப்பட்டது. eனக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் இல்லை. மற்ற சிறைகளில் என்னை வழக்கமான கைதி போலவே நடத்தினார்கள்” எனத் தெரிவித்திருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே நெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கை வெளிவந்த பிறகே உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளிவரும்.

Read More : பிக்பாஸ் ரஞ்சித் எத்தனை பெண்களை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா..? இப்போது யாருடன் வாழ்கிறார்..?

English Summary

YouTuber Chavku Shankar has been admitted to a private hospital for chest pain.

Chella

Next Post

ரயில் விபத்து..!! தண்டவாளத்தில் போல்ட்டுகளை கழற்றிய மர்ம நபர்கள்..? NIA விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

Sat Oct 12 , 2024
Train accident..!! The mysterious people who removed the bolts on the rails..? Shocking information in NIA investigation..!!

You May Like