பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலை 4.30 மணிக்கு நடந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.. விரைவு நடவடிக்கை குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டு ராணுவ முகாமில் அதி தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.. அந்த முகாமில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் மற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து ராணுவ முகாமை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.. துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்