fbpx

#BREAKING : திடீரென தீப்பிடித்த கார்…. சென்னையில் பரபரப்பு!!!

கார் போன்ற வாகனங்கள் வெயில் காலங்களில் ஓடி கொண்டிருக்கும் போது தீ பிடித்து பற்றி எறிவது போன்ற நிகழ்வுகளை நாம் கேட்டிருப்போம், அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சென்னையில் நடந்துள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலம் எப்போதும் பிஸியாகி இயங்கும் ஒரு சாலை, அதில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இன்று மாலை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர் காரில் பயணித்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் தற்போது வெயில் காலமும் கிடையாது, ஆனால் காரில் ஏற்பட்ட எதாவது பிரச்சனை காரணமாக தீ பற்றி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Kathir

Next Post

முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை 5 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம்...!

Mon Dec 19 , 2022
சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 5:00 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக அமைச்சரவையில் புதிதாக கடந்த 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார். மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், அமைச்சர் மதி […]
முதல்வருக்கு உடல்நலக்குறைவு..! அரசு நிகழ்ச்சிகள் திடீர் ரத்து..! மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்..!

You May Like