சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே இருக்கிறது மலையம்பாளையம் கிராமம். மரங்களோடு பசுமையான சூழ்நிலை நிறைந்திருக்கும் இந்த பகுதியில் தற்போது ஒரு பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.
மலையம்பாளையம் பகுதியில் சுந்தர்ராஜன்(32) என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி நிவேதா என்ற மனைவியும் 7 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். விசைத்தறி தொழில் செய்து வந்த சுந்தர்ராஜன் தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் தான் அவர் எதிர்பாராத விதமாக திடீரென்று கொலை செய்யப்பட்டு இருக்கிறார் விசைத்தறி தொழிலில் வரும் வருமானம் குடும்பத்தை கவனிக்க போதுமானதாக இல்லாததால், கணவரின் கஷ்டத்தை பகிர்ந்து கொண்டு மனைவி நிவேதா உள்ளூரிலேயே தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சென்று வந்தார்.
அந்தப் பள்ளியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய பள்ளி வயது தோழி வித்யா என்பவரை அவர் சந்தித்துள்ளார் மேலும் வித்யா மலம் தினேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
தினேஷுக்கும், நிவேதாவுக்கும் இருந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது இந்த நிலையில் தினேஷும் நிவேதாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த கள்ளக்காதல் விவகாரம் சுந்தரராஜனுக்கு தெரிய வந்துள்ளது ஆகவே மனைவியை கடுமையாக கண்டித்து, வேலைக்கு செல்வதை தடுத்துவிட்டார் சுந்தர்ராஜன்.
ஆனால் கணவன் தன்னுடைய கள்ளக்காதலுக்கு தடை போட்டது நிவேதாவுக்கு கடுப்பு கிளப்பி இருக்கிறது. ஆகவே கள்ளக்காதலனோடு ஒன்று இணைந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். நிவேதா அதோடு சுந்தர்ராஜனை கொலை செய்துவிட்டு தினேஷோடு குடும்பம் நடத்தவும் அவர் ஆயத்தமாகி உள்ளார்.
இந்த நிலையில் தான், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் சுந்தரராஜனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயக்கம் அடைய செய்திருக்கிறார். மனைவி நிவேதா அதன் பிறகு கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவைத்து தலையணையால் சுந்தரராஜனின் முகத்தை அழுத்தி அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு இந்த கொலையை தற்கொலையாக மாற்ற முயற்சித்துள்ளனர்.
இருந்தாலும் காவல்துறையினர் சுந்தரராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வு அறிக்கையில் வெளியான தகவலின் படி அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. ஆகவே அவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதால் நிவேதாவிடம் இருந்து விசாரணையை தொடங்கியது காவல்துறை.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளியானது. இந்த கொலை சம்பவத்திற்கு நிவேதாவின் தோழி வித்யா மூளையாக இருந்து செயல்பட்டார். என்பதும் அவர்களுடைய விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நிவேதா தினேஷ் வித்யாவிலே மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.