fbpx

நெருங்கும் கோடைக்காலம்..!! ஏசியை இப்படி மட்டும் யூஸ் பண்ணாதீங்க..!! பெரும் ஆபத்து..!!

குளிர்காலத்தில் கூட ஏசி போட்டு போர்வையை நன்றாக போர்த்தி தூங்கும் பழக்கத்திற்கு பெரும்பாலானோர் ஆளாகிவிட்டனர். கோடைக்காலமும் நெருங்குகிறது. ஏசியால் கிடைக்கும் சொகுசைவிட அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். ஒரு அறையை குளிரூட்டுவதற்காக அங்குள்ள மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சுகிறது. ஏசி அரை முழுவதும் சில்லென்று நிம்மதியான உணர்வை கொடுத்தாலும் நம் உடலில் உள்ள ஈரப்பதமும் உறிஞ்சப்படுகிறது. இதனால் இயல்பாகவே நமது உடல் டிஹைரேட் ஆகி நாளடைவில் பல்வேறு உடல் பாதைகளுக்கு வழிவகுக்கிறது. நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட ஏசி ரூமில் அமரும்போது நீர் வற்றி போவதால் தலைவலி ஏற்படும். வறண்ட குளிர் காற்று சரும ஈரத்தையும் உறிஞ்சி விடுவதால் பொலிவிழந்த வறண்ட சருமத்தை மட்டுமே தெரியும். சிலருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உடலில் ஈரப்பதம் சரியான அளவு இல்லாததால் சிலருக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏசி சரியான பராமரிப்பில் இல்லையெனில் அலர்ஜி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சருமத்திற்கும் இயற்கையான ஈரப்பதம் கிடைக்காததால் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை விரைவில் பெறக்கூடும். ஏசி-யை சரியாக சர்வீஸ் செய்து பயன்படுத்துவதோடு 24 மணி நேரமும் ஏசியில் இருப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை காற்றோட்டத்தையும் அனுபவிப்பது மேம்பட்ட உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய உறுதுணையாக இருக்கும்.

Chella

Next Post

இனி ஏசியே தேவையில்லை..!! வீட்டில் இதை மட்டும் செய்யுங்க..!! கோடை வெயிலை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்..!!

Thu Mar 9 , 2023
கோடை நெருங்கினாலே அனல் எங்கு சென்றாலும் துரத்தும். நிழல், தண்ணீர் இது மட்டுமே நம் இளைப்பாறலாக மாறும். இப்படிப்பட்ட சூழலில் குளுகுளு வென ஏசி அறையே கிடைத்தால் எப்படி இருக்கும்..? அது சொர்க்கத்தை காட்டிலும் மேலாக தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு அது வாய்க்கும்..? ஆனாலும் கவலையில்லை. கிடைக்கும் ஃபேன் காற்றை வைத்துக்கொண்டே குளுகுளு ஏசி உணர்வை பெறலாம். அதற்கு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும். ஜன்னல்கள்: கோடை […]
இனி ஏசியே தேவையில்லை..!! வீட்டில் இதை மட்டும் செய்யுங்க..!! கோடை வெயிலை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்..!!

You May Like