fbpx

சூப்பர்..!! விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள்..!! ரெடியான ராக்கெட்..!! இஸ்ரோ முன்னாள் தலைவர் சொன்ன குட் நியூஸ்..!!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ககன்யான் என்பது மனிதர்களை பாதுகாப்பாக விண்ணுக்கு அனுப்பி 7 நாட்கள் தங்கி சோதனைகள் செய்த பிறகு மீண்டும் பூமிக்கு திருப்பி வரும் திட்டமாகும். அதற்கான தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை விண்ணுக்கு ராக்கெட்கள் மூலம் செயற்கைகோள்களை மட்டுமே அனுப்பிவந்தோம். மனிதர்களை அனுப்பும் போது பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் தேவை. மனிதர்களை அனுப்பக் கூடிய வகையில் ராக்கெட்டை உருவாக்க வேண்டும். அதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பியவுடன் பூமியில் இருப்பது போன்ற சீதோஷண நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக சுற்றுசூழலுக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்தும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. மனிதர்கள் திரும்பி வரும் போது அதிகமான வெப்பத்தை தாங்க கூடிய தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. முக்கியமாக பூமியில் இறங்கும் போது இறங்கும் இடத்தை தேர்வு செய்வது உள்ளிட்ட பலதரப்பட்டசோதனைகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் முடிந்த பிறகு 2 விண்கலங்களை மனிதர்கள் இல்லாமல் முதலில் ரோபோகளை அனுப்பி பின்னர் அதனுடைய செயல் திறன்களை ஆராய்ந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு தான் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த காதலியை உயிருடன் எரித்துக் கொன்ற காதலன்..!! மீண்டும் கொடூரம்..!!

Tue Feb 21 , 2023
டெல்லியில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த இளம்பெண்ணை காதலனே தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம் பல்பீர் விஹாரில் வசிப்பவர் மோஹித். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில், இருவருமே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அந்த இளம்பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்து கடந்த 6 […]

You May Like