fbpx

சூப்பர் திட்டம்..!! ரூ.15 லட்சம் வரை கடன்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) கடன் உதவி திட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுக்கால கடன் திட்டம் மற்றும் தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான புதிய போர்க்காலக் கடன் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சம் கடனுதவி வழங்கப்படுவதாகவும் சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். டாப்செட்கோ கடன் திட்டங்களில் விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மக்களே இதை செய்துவிட்டீர்களா..? ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை திடீர் நிறுத்தம்..? காரணம் என்ன..?

Mon May 15 , 2023
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு அறிவுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பலரும் இணைக்காமலேயே […]

You May Like