fbpx

நோட்…! 12 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு…! முழு விவரம்

12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி ஜூலை 1 ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், 11-ம் வகுப்பு துணை தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி ஜூலை 1 ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், 11-ம் வகுப்பு துணை தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24-ம் தேதி மொழித் தேர்வு, 25-ம் தேதி ஆங்கிலத் தேர்வு, 26-ம் தேதி பயோ-கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், சமூக அறிவியல், ஹோம் சயின்ஸ், புள்ளியியல், பேசிக்ஸ் எலக்ரிக்கல் இஞ்சினியரிங், ஜூன் 27-ம் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல், ஜூன் 28-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி தேர்வுகள் நடக்கவுள்ளது.

மேலும் ஜூன் 29-ம் தேதி உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம், பேசிக் சிவில் இஞ்சினியரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ், பேசிக் மெக்கானிக்கல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஜூலை 1-ம் தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயோலஜி, டெக்ஸ்டைல் மற்றும் ட்ரஸ் டிசைனிங், விவசாய அறிவியல், நர்சிங் ஆகிய தேர்வுகள் நடக்கவுள்ளது.

Vignesh

Next Post

2 தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!… 9 மணிநேரம் நீடித்த துப்பாக்கிச்சூடு!

Tue Jun 4 , 2024
Pulwama Encounter: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 3) பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் உட்பட இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் நிஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் உட்பட இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட […]

You May Like