fbpx

மணிப்பூர் மாநில துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு, இரண்டு பேர் படுகாயம்…!

மணிப்பூர் மாநிலத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தொடர்ந்து இனக்கலவரம் நடந்து வருகிறது.

மே 3 ஆம் தேதி தொடங்கிய மோதலில் இருந்து 80 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். வன்முறையை அடக்க இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டது.‌‌ இந்த வன்முறையில் 1,700 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Vignesh

Next Post

ரூ.2000 நோட்டு..!! பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்..!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Sat Jun 10 , 2023
ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை என்றும் இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் நிதிக் கொள்கை அறிவிப்பு நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் பேசுகையில், ”ரிசர்வ் வங்கியின் செலாவணி நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பு மே 19-ல் வெளியிடப்பட்டது. இந்த நோட்டுகளை […]

You May Like