fbpx

அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது!… பிரதமர் மோடி ட்வீட்!

அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். அதன்படி, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியின் இல்லத்துக்கு சென்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், லோக்சவன் கல்யாண் மார்க்கிற்கு அமெரிக்கா அதிபரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்பு உலக நாடுகளின் நன்மைக்கு தொடர்ந்து பங்கு அளிக்கும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Kokila

Next Post

UGC அதிரடி...! செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணம்...!

Sat Sep 9 , 2023
நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. யுஜிசி கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கையை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பல்கலைக்கழக மானியக் குழு மீண்டும் எச்சரித்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைத் தேர்வு செய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் முழு கட்டணத்தையும் திரும்பப்பெற அனுமதிக்குமாறு நிறுவனங்களை ஆணையம் கேட்டுக் கொண்டது. 2023-24 […]

You May Like