தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 28ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையில் அண்ணாமலை மாநிலத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளையும் பார்வையிட உள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 2024 ஜனவரி மத்தியில் 120 நாட்கள் யாத்திரை சென்னையில் நிறைவடையும்.
ஏப்ரலில் முதலில் திட்டமிடப்பட்ட யாத்திரை, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசின் பணிகளைப் பிரபலப்படுத்தும் விதமாக இந்த யாத்திரை அமைந்துள்ளது. அண்ணாமலை ஒரு நாளைக்கு இரண்டு சட்டமன்றப் பகுதிகளுக்குச் சென்று, சராசரியாக 9.5 கி.மீ தூரம் நடந்து சென்று பேருந்தில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மதுரையில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள அண்ணாமலைக்கு திடீரென டெல்லி பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து இன்று டெல்லி உள்ளார். அக்கட்சியின் தேசிய தலைவரான நட்டாவின் அழைப்பின் பேரில், அண்ணாமலை டெல்லிக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.