fbpx

தமிழக அரசின் ’நம்ம ஸ்கூல்’ திட்டம்..!! அரசுப் பள்ளிகளில் இப்படி ஒரு வசதியா..?

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ‘நம்ம ஸ்கூல்’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பங்களிப்பையும் இணைத்து ‘நம்ம ஸ்கூல்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களையும், தன்னார்வலர்களையும் கொண்டு சிஎஸ்ஆர் நிதி எனப்படும் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ’நம்ம ஸ்கூல்’ திட்டம்..!! அரசுப் பள்ளிகளில் இப்படி ஒரு வசதியா..?

இத்திட்டத்தில் இணையும் முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பர். பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைத்தல், கழிவறைகள் கட்டுதல், அறிவியல் ஆய்வகங்கள் அமைத்தல், நூலகங்கள் ஏற்படுத்துதல், மேஜை, நாற்காலிகள், கணினிகள் வாங்கித் தருதல், பள்ளி கட்டிடங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் இந்த ’நம்ம ஸ்கூல்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

Chella

Next Post

டீச்சரை தனியாக அழைத்துச் சென்று உல்லாச பாடம் கற்பித்த தலைமை ஆசிரியர்..!! சம்பவம் செய்த மாணவன்..!!

Mon Dec 19 , 2022
பள்ளியில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்த மாணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் பிரசாத் (48) என்பவர் இருந்து வருகிறார். இவருடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கு திருமணம் ஆகிவிட்டது. […]

You May Like