தமிழ்நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் பண தேவைகளை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதாக அரசு விளக்கமளித்தது. அதனைப் போலவே 2026-27வரை ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தின் பணவீக்க விகிதம் அல்லது ஆறு சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பதால் ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்க விகிதம் 4.70 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக ஜூலை 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் கூடுதலாக 4.70 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.