fbpx

தமிழக அரசின் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் +2 முடித்தவர்களுக்கு ₹ 52400 சம்பளம் வரை 335 காலியிடங்கள்!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 335 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பினை வெளியிட்டு இருக்கிறது இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக இருக்கும் தியேட்டர் அசிஸ்டன்ட் பணிகளுக்கான 335 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம்.

இந்த அறிவிப்பின்படி இவ்வேளையில் சேர விருப்பமுள்ளவர்கள் 23.02.2023 தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைவாய்ப்பில் சேர்வதற்கு பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல் வேதியியல் தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகள் அல்லது இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவுகளில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக ஒரு வருடம் தமிழக அரசால் நடத்தப்படும் மருத்துவக் கல்வியை நிறுவனங்களில் தியேட்டர் அசிஸ்டன்ட் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும் உச்சபட்ச வயது வரம்பு 59 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக மாதம் ஒன்றுக்கு ரூ.16600/- முதல் ரூ.52400/- வரை சம்பளம் வழங்கப்படும். இப்படிக்கு விண்ணப்பிக்க பதிவுக் கட்டணமாக இதர பிரிவினருக்கு 600 ரூபாயும் எஸ் சி எஸ் டி எக்ஸ் சர்வீஸ் மேன் மற்றும் சலுகைகள் உள்ளவர்களுக்கு 300 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பத்தினை தமிழக அரசின் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி 23.2.2023 ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய தகவல்களைப் பெற mrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Baskar

Next Post

சூடாக எதை அருந்தினாலும் கேன்சர் வரும்?... ஆய்வாளர்கள் ஷாக் ரிப்போர்ட்!

Wed Feb 22 , 2023
தொடர்ச்சியாக 60 டிகிரி செல்சியஸிற்கு மேலாக சூடான பானங்களை அருந்தினால் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிக சூடாக டீ, காஃபியை தொடர்ந்து குடித்தால் உடல் நலனில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. சர்வதேச மெடிக்கல் ஜர்னலின் ஆய்வின் படி, எந்த ஒரு பானத்தையும் அதீத சூடாக அதாவது […]
திடீரென்று காஃபி குடிப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும்..? அதிக நன்மைகளும்.. சில தீமைகளும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like