fbpx

பைக் மீது டேங்கர் லாரி மோதி ஒரே வாகனத்தில் சென்ற 4 பேர் பலி..!! நெல்லையில் சோகம்..!!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சென்றுக் கொண்டிருந்த நிலையில், டேங்கர் லாரியை கடக்க முயன்ற போது லாரியின் சக்கரத்தில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தில் 2 குழந்தைகள், 2 பெரியவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜா புதுக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருசக்கர வாகனத்தில், நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில், வண்ணாரப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற டேங்கர் லாரியை இவர்கள் முந்தி செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது, லாரி இருசக்கர வானத்தின் பின்புறத்தில் மோதியதால் 4 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : திடீரென ரயில் முன் தவறி விழுந்த பெண் எம்.எல்.ஏ..!! பரபரப்பு வீடியோ உள்ளே..!!

English Summary

While trying to cross the tanker truck, 4 people died on the spot when they got stuck in the wheel of the truck.

Chella

Next Post

’வேலை வேலை என்று ஓடாதீர்கள்’..!! ’உணவு இடைவெளியின்போது உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள்’..!! ரஷ்யா அதிரடி..!!

Tue Sep 17 , 2024
The Russian people should not always run for work. Russian President Putin has advised to have sex during meals and breaks.

You May Like