நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் அதிகாலையில் சாம்பார் மணி உள்ளிட்ட 2 பேர் மதுபானங்களை திருடிக் கொண்டிருந்தனர் இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல்களை கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாம்பார் மற்றும் மணியை பிடிக்க முயற்சி செய்தபோது கத்தியால் காவலர்களை தாக்கி விட்டு தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தற்காப்புக்காக காலில் சுட்டனர். பின்னர் சுடப்பட்ட சாம்பார்மணிக்கு தொடையில் குண்டுப்பாய்ந்து கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதோடு, 2 காவலர்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தப்பிச்சென்ற மற்றொரு கொள்ளையனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.