டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான TATA குழுமம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டி.சி.எஸ். (TCS) என்ற மென்பொருள் நிறுவனமும் அடங்கும். இந்தியாவில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், விழா காலத்தை முன்னிட்டு டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரியும் 70% ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கப்பட இருக்கிறது.
எஞ்சியுள்ள 30 சதவீத ஊழியர்களுக்கு செயல் திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என டி.சி.எஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் மொத்தமுள்ள 6 லட்சம் ஊழியர்களில் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக டி.சி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.