fbpx

தேநீர் விருந்து அழைப்பு..! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய கடிதம்..!

தேநீர் விருந்து தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி மாளிகை மற்றும் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம். இந்த தேநீர் விருந்து தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “தேநீர் விருந்தில், மரபுப்படி விருந்தினர்களை அழைப்பதுடன், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களையும் அழைக்க வேண்டும்.

தேநீர் விருந்து அழைப்பு..! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய கடிதம்..!

மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர், பத்ம விருது பெற்றவர்கள், கொரோனா காலத்தில் சமூகத்துக்கு வியத்தகு சாதனை செய்தவர்கள், சுற்றுச்சூழல் போராளிகள், ‘மன் கி பாத்’ உரையில் பிரதமரால் குறிப்பிடப்பட்டவர்கள், ஊராட்சி பெண் தலைவர்கள் ஆகியோரையும் அழைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு 25 முதல் 50 இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

கடன் செயலிகளுக்கு புதிய விதிமுறைகள் அமல்..! ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!

Thu Aug 11 , 2022
கடன் செயலிகளுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், “கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும், கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கிற்கும் இடையில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். இதில், கடன் சேவை வழங்குநர் அல்லது 3ஆம் தரப்பினர் கணக்குகளின் வழியாக செயல்படுத்தக் கூடாது. டிஜிட்டல் கடன் வழங்குநருக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வங்கிகள் போன்ற ஒழுங்குமுறைக்கு உட்பட்ட […]
கடன் செயலிகளுக்கு புதிய விதிமுறைகள் அமல்..! ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!

You May Like