தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. கடந்தாண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான டெட் 2-ஆம் தாள் தேர்வு முடிவுகள் வெளியானது.
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை கணினி வழியில் இந்த தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவினை www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்க இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.