சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசிப்பவர் விஜயகாந்த்(37) கட்டிட தொழிலாளியான இவருடைய மனைவி ரேணுகா ரேணுகாவின் உறவினரான தர்மபுரியை சேர்ந்த ராஜீவ் காந்தி (32) என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்தார் இவர் ரேணுகாவின் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி வேலைக்கு சென்ற ராஜீவ் காந்தி வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை.
பல்வேறு பகுதிகளில் அவரை தேடிப் பார்த்தும் ராஜீவ் காந்தி கிடைக்கவில்லை. இதற்கு நடுவே பெருங்குடி ஏரியில் ஒரு வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அந்த விசாரணையில் உயிரிழந்தது ராஜீவ் காந்தி தான் என்பது தெரிய வந்தது. கழுத்தின் காயம் இருந்ததால் சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ரேணுகாவின் கணவர் விஜயகாந்திடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக விஜயகாந்த் காவல்துறையினரிடம் தெரிவித்ததாவது தர்மபுரியில் திருமணம் ஆகி வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த ராஜீவ் காந்தியை சென்னைக்கு அழைத்து வந்து தங்க வைத்தேன். சில தினங்கள் கட்டுமான வேலைக்கு சென்ற அவர் குடித்துவிட்டு சுற்றி வந்தார் இந்த நிலையில், என்னுடைய மனைவியுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது ஆகவே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
இத்தகைய நிலையில் தான் கடந்த 16ஆம் தேதி ராஜீவ் காந்தியை பெருங்குடி ஏரி கரைக்க அழைத்துச் சென்று இருவரும் மது குடித்ததாக தெரிவித்துள்ளார் விஜயகாந்த். பின்னர் மீண்டும் இருவருக்கும் இடையில் தவறாக ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் ராஜீவ் காந்தி கழுத்தில் குத்தி அதன் பிறகு ஏரியில் தள்ளி கொலை செய்திருக்கிறார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆகவே விஜயகாந்தை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.