fbpx

அக்டோபர் 24 முதல் 1-10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்…! தெலங்கானா அரசு அதிரடி…

தெலங்கானாவில் அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

தெலங்கானா அரசு தசரா பரிசாக மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்ல சத்தான உணவை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்திற்கு, மாநில அரசு, ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு சத்தான உணவு வழங்குவதுடன், படிப்பில் அவர்களின் கவனத்தை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயத் தொழிலாளர்களாக இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், காலையிலேயே வேலைக்குச் செல்வதற்காக வீடுகளை விட்டு வெளியேறும் சிரமங்களை முதல்வர் புரிந்து கொண்டார்.

தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை கேசிஆர் சமீபத்தில் அனுப்பினார். அந்தக் குழு அழித்த அறிக்கையின் படி மாநிலத்தில் காலை உணவு திட்டம் செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

”இனி கரண்ட் அதிகமா யூஸ் பண்ணா அபராதம் தான்”..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

Mon Sep 18 , 2023
தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத்தின் திருத்தத்தின்படி கூடுதல் லோடு மின்சாரத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்ட திருத்தத்தின்படி, 12 மாதங்களில் அனுமதிக்கப்பட்ட மின்சுமையை 3 முறை மீறும் வீட்டு நுகர்வோர், கூடுதல் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மின் பயன்பாட்டாளருக்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே மின்சார லோடு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால், […]

You May Like