தலைநகரில் டெல்லியில் ஷரத்தா என்ற பெண்ணை அவருடைய காதலர் 36 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்சமயம் அதே பாணியில் மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மிரா பகுதியில் இருக்கின்ற அப்பார்ட்மெண்டின் 7வது மாடியில் ஒரு ஜோடி லீவ் இன் முறையில் மூன்று வருடங்களாக வசித்து வந்தனர். திடீரென்று அந்த வீட்டில் இருந்து மிகவும் மாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூட்டி இருந்த கதவை உடைத்து பார்த்தபோது துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கிடந்திருக்கிறது.
இதைக் கண்டு மிரண்டு போன காவல் துறையினர், சடலத்தின் துண்டுகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், காதலர் மனோஜ் சாகனி என்பவர் அந்த பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியது தெரியவந்துள்ளது அதோடு சில உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்து நாய்க்கு உணவாக போட்டதும் தெரியவந்துள்ளது.
இதனை அறிந்து திகைத்துப்போன காவல்துறையினர் வீட்டில் கடந்த சடலத் துண்டுகளை மட்டும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து 52 வயதான மனோஜ் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரிடம் எதற்காக கொலை செய்திருக்கிறீர்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் அதோடு சந்தேகத்தின் அடிப்படையில், சில உடல் துண்டுகள் சாக்கடையில் போடப்பட்டிருக்கிறதா என்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.