fbpx

தோழியிடம் இருந்து வந்த அந்த மெசேஜ்..! 185 விமான பயணிகளும் அலறல்..! பரபரப்பு

விமான பயணி ஒருவருக்கு அவரது தோழி அனுப்பிய குறுஞ்செய்தியால், விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

மங்களூரு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்வதற்காக இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த சக பயணி ஒருவரின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ”நீ ஒரு வெடிகுண்டு வீசுபவர்” (You Are A Bomber) என மெசேஜ் வந்துள்ளது. இதனை, அருகில் இருந்த பெண் பயணி ஒருவர் தற்செயலாகப் படித்துவிட்டார். இதையடுத்து, அந்த பெண் பயணி பயந்துபோய் இது தொடர்பாக விமானத்தில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

தோழியிடம் இருந்து வந்த ஒரே ஒரு மெசேஜ்..! 185 விமான பயணிகளும் அலறல்..! பரபரப்பு

பின்னர், விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளின் உடைமைகளில் தீவிர சோதனை நடைபெற்றது. இறுதியில் குறிப்பிட்ட நபரின் தோழியுடனான தனிப்பட்ட உரையாடலில் அவர் மேலே குறிப்பிட்ட வார்த்தையை பயன்படுத்தினார் என்றும், அதில் உள்நோக்கம் இல்லை என்றும் தெரியவந்தது. கடைசியில் பரிசோதனைகள் எல்லாம் முடிந்த பின்னர் 185 பயணிகளும் மீண்டும் அதே விமானத்தில், 6 மணி நேர தாமதத்திற்குப் பிறகு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

Chella

Next Post

உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட முதியவர்; 40 வயது பெண்.. முதியவர் மரணம் காரணம் என்ன..?

Mon Aug 15 , 2022
மும்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உல்லாசமாக இருந்த 61 வயது முதியவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறினர். மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இறந்தவர் தனது காதலன் என்று அவருடன் இருந்த 40 வயது பெண் கூறியுள்ளார். புறநகர் குர்லாவில் இருக்கும் ஹோட்டலுக்கு அந்தப் பெண்ணுடன் காலை 10 மணி அளவில் முதியவர் சென்றார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் ஹோட்டலின் […]

You May Like