செல்போனில் ஆபாச படம் காட்டி 8ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து 3 மாத கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கும் மினி வேனில் பூண்டு, புளி வியாபாரம் செய்யும் சதீஷ் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. நாளடைவில் இவரது கள்ளக்காதல் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதை அடுத்து அந்த பெண், கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் தனியாக வசித்து வருகிறார்.
சிறுமி தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்தார். தந்தை அதிகமாக வீட்டு வேலை செய்ய சொல்வதாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில், வீட்டில் டிவி இல்லாததை சாதகமாக்கி தாயின் கள்ளக்காதலன் சிறுமிக்கு செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கிடையே, சிறுமி படிக்கும் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது.
மேலும், அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமி என்பதால், இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தாயின் கள்ளக்காதலன் சதீஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : 2 கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்..!! உங்களுக்கும் இப்படி வருதா..? என்ன காரணம்..?