fbpx

தம்பியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற அண்ணன்..!! உடலை செப்டிக் டேங்கில் பதுக்கிய பயங்கரம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன் (68). இவரது மகன்கள் ஏழுமலை (47). திருமலை (44). ஏழுமலையின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். திருமலைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏழுமலையும், தம்பி திருமலையும் கீழ்குப்பம் கிராமத்தில் அருகருகே வசித்து வந்தனர். இருவரும் மதுகுடித்துவிட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல், சம்பவத்தன்று இரவும் 11 மணியளவில் ஏழுமலை, திருமலை ஆகிய இருவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அண்ணன் ஏழுமலை, தம்பி திருமலையை இரும்பு பைப்பால் சரமாரியாக அடித்துக் கொலை செய்திருக்கிறார்.

பின்னர், சடலத்தை தங்களது வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்க்கில் போட்டு லேசாக மண்ணை போட்டு புதைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் வீட்டிற்குள் வந்துவிட்டார். இதையடுத்து மறுநாள் காலை வழக்கம்போல் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற ஏழுமலை, தம்பியை கொன்றுவிட்டதில் குற்ற உணர்ச்சியில் இருந்த அவர், இதுகுறித்து அங்கிருந்த சக தொழிலாளர்களிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். பின்னர், தம்பி திருமலையின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ரூ.15 லட்சம் வரை மானியம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!

Mon Feb 27 , 2023
தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், டான்சீட் திட்டத்தின் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டமானது, தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக வடிவமைக்கப்பட்டு இதுவரை 4 பதிப்புகள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 5ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானிய நிதி […]

You May Like