fbpx

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்… ரத்த காயத்துடன் நிர்வாணமாக வீட்டிற்கு நடந்து வந்த வீடியோ வெளியீடு..!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 15 வயது சிறுமியை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும் அந்த சிறுமியை நிர்வாணமாக சாலையில் இரண்டு கிலோமீட்டர் நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் கழித்து வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், சிறுமி நிர்வாணமாக சாலையில் நடக்கும் காட்சி இருக்ஙிறது. சிறுமி ரத்தம் கொட்ட, சாலையில் நிர்வாணமாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கர்கள் அவரை நிர்வாணமாக காரில் இருந்து தூக்கி வீசி இருக்கின்றனர். சிறுமி உதவியற்ற நிலையில் சாலையில் நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார். ஆனால் சாலையில் சிறுமியை கடந்து சென்றவர்கள் என்ன ஏது என்று விசாரிக்கவில்லை உதவ முன்வரவில்லை வேடிக்கை மட்டும் பார்த்துள்ளனர். இது குறித்து, சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், வீடு திரும்பிய சிறுமி ரத்த காயத்துடன் இருந்தார். அவருக்கு நடந்த கொடுமையை கூறினார். அதன் பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் சிறுமி அவரது வீட்டை அடைய அதிக ரத்தப்போக்குடன் நடக்க வேண்டியிருந்தது.

சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளிக்க காவல்துறையை அணுகினர், ஆனால் மாவட்டபோலீஸ் சூப்பிரெண்டு ஹேமந்த் முன் இந்த விஷயத்தை கொண்டு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. அதன்பிறகு, செப்டம்பர் 7-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். அதன்பின்னர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து ஒரு குற்றவாளியை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கின்றனர்.

மொராதாபாத் காவல்துறையினர், சிறுமி பக்கத்து கிராமத்தில் ஒரு கண்காட்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, அவரை ஐந்து பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு, ஒரு கிராமவாசி சம்பவ இடத்திற்கு விரைந்தார், ஆனால் அதற்குள் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் அவளது உடைகள் மற்றும் பிற பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு சந்தீப் குமார் மீனா கூறும் போது “பிரிவு 376டி (கூட்டு பலாத்காரம்) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை செப்டம்பர் 15-ஆம் தேதி கைது செய்தோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.

Baskar

Next Post

ஆசைக்கணவனை முன்னாள் காதலிக்கு கட்டி வைத்த மனைவி…

Thu Sep 22 , 2022
திருப்பதியில் சினிமாவில் நடப்பது போல தன் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு ஆசைக்கணவனை முன்னாள் காதலிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. நெல்லூர் மாவட்டம் டக்கிலியில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தலத்தில் அறிமுகமாகிக் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்  . இவருக்கு திருமணத்திற்கு முன்பே விசாகபட்டிணத்தைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான […]

You May Like