ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரியில் வசிக்கும் பெண்ணிற்கு, அதே பகுதியில் வசிக்கும் அப்பாராவ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மனைவியின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட கணவர், ஆத்திரத்தில் மனைவியின் கள்ளக்காதலனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் RIP என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதை பார்த்த கள்ளக்காதலன் பெங்களூருவில் வேலை செய்த கள்ளக்காதலியின் கணவனை தனது நண்பருடன் சேர்ந்து கடத்தி சந்திரகிரிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். இரண்டு பேரும் சேர்ந்து அவரின் தலையில் சிறுநீர் கழித்து மொட்டை அடித்துள்ளனர். அதன் பின்னர் அவரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து கள்ளக்காதலியின் கணவனை, இனி உங்கள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று மிரட்டி பேச வைத்து, வீடியோ பதிவு செய்துள்ளனர்.பின்னர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் அப்பாராவ் மற்றும் அவருடைய நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த கணவன் தற்போது திருப்பதியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.