fbpx

காருக்கு அடியில் மாட்டிய பைக்கை, 30 கிலோமீட்டர் தூரம் வரை தரதரவென்று இழுத்துச் சென்ற கார்..!

உத்தரபிரதேச மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் உள்ள ஜியான்பூர் நகரில் இரவு 10:00 மணியளவில் வீட்டின் அருகே பைக்கில் வந்துக்கொண்டிருந்த போது, அருகில் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது, இதில் பைக் ஓட்டுநருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து பைக் காரின் அடியில் சிக்கியது. ஆனால், கார் டிரைவர், காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கி தப்பி ஓடினார்.

இந்த விபத்தைக்கண்ட அருகில் இருந்த பைக் ஓட்டுநரின் உறவினர்கள் காரை துரத்த ஆரம்பித்தனர். காரின் அடியில் மாட்டிய பைக்கை, தரதரவென்று 30 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றதாக் கூறப்படுகிறது. வழியெங்கும் நெருப்பு பொறியுடன் பைக்கை இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களிலும் உலா வருகிறது.

துரத்தி வந்தவர்களுக்கு பயந்து 30 கிமீ தூரம் ஓட்டிச் சென்று வீட்டை அடைந்த கார் டிரைவர், பயந்து உள்ளே சென்று வீட்டை பூட்டிக் கொண்டார். இதற்கிடையே காரின் அடியில் இருந்த பைக்கை அப்புறப்படுத்திய உறவினர்கள் காரை சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்ப்படுத்திய காரை நாசம் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

போதும் போதும் என்ற அளவிற்கு உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி….! திடீரென்று வந்த ஊர் மக்கள் கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடியை என்ன செய்தனர் தெரியுமா…..?

Mon Aug 21 , 2023
வீட்டில் யாரும் இல்லாத நிலையில், உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை ஊர்மக்கள் ஒன்று திரண்டு கையும், களவுமாக பிடித்து, கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரிபுரா மாநிலம் பிலோனியா அடுத்துள்ள ஈசன்சந்திர நகர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், வசித்து வந்தார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவருடன் அறிமுகம் உண்டானது. […]

You May Like