fbpx

சீமானுக்கு செக் வைத்த நீதிமன்றம்..!! இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக அதிரடி உத்தரவு..!! தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிப்பு..!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சரக டிஐஜி வருண்குமார், அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான வந்திதா பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதாக வருண் குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சீமான், வருண்குமார் ஆகிய இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி டிஐஜி வருண் குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், சீமான் சம்மனை வாங்க மறுத்துள்ளார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக இருவரும் ஏப்ரல் 7ஆம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இன்றும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகவில்லை. சீமான் தரப்பில் அவரது வழக்கறிஞர் மட்டுமே ஆஜரானார். இதனால், இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் இல்லாவிட்டால், சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் என திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலாஜி கடுமையாக எச்சரித்துள்ளார்.

Read More : கடுப்பான சபாநாயகர்..!! அதிரடி உத்தரவுபோட்ட அப்பாவு..!! மீண்டும் பேரவையில் கொந்தளித்த அதிமுகவினர்..!! பரபரப்பு

English Summary

An order has been issued to appear in person by 5 pm today in the case filed by DIG Varunkumar against Naam Tamilar Party coordinator Seeman.

Chella

Next Post

’எடப்பாடியை சுத்தமா மதிக்கிறதே இல்ல’..!! செங்கோட்டையன் மீது கடும் அதிருப்தியில் நிர்வாகிகள்..!! சட்டப்பேரவையில் தனி ஆளாக பேசியதால் பரபரப்பு..!!

Mon Apr 7 , 2025
While all the AIADMK members carried the banner, Sengottaiyan refused to accept the banner given to him.

You May Like