fbpx

உடனே ரிப்போர்ட் வேண்டும்…! தமிழம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வந்தது அதிரடி உத்தரவு…!

பொதுத் தேர்வினை எழுத வராத பள்ளி மாணவர்களின் விபரங்களை அன்றே தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு சார்ந்து 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களில் தேர்வுக்கு வராதவர்கள் எவரென கண்டறியப்பட வேண்டும். இத்தேர்வின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்கும், அனைத்து தேர்வர்களும் தேர்வினை எதிர்கொள்வதற்கும், துணைத் தேர்வு சிறப்பு பயிற்சி மையம் ஏற்பாடு செய்வதற்கும் கண்காணிக்கவும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 10,24 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை அவசியம் நடத்த அறிவுறுத்தப்படுகிறது.

பொதுத்தேர்விற்காக பதிவு செய்யப்பட்ட மாணவர்களில் (Nominal Roll) நீண்ட நாட்களாக விடுப்பில் இருப்பின் அவர்கள் குறித்த விவரங்களை உரிய பள்ளி தலைமையாசிரியர்கள் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு முன்னரே தயார் செய்து வைத்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பதிவு செய்த மாணவர் பெயர் பட்டியலை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அளிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.

விலையில்லா பாடப்புத்தகம்..! அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!

நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர்ப் பட்டியலை சேகரித்து அந்த மாணவர்களை பள்ளியில் நடைபெறும் சிறப்புப் பயிற்சி மையங்களுக்கு வரவழைத்து பயிற்சியில் பங்கேற்பதை பள்ளி மேலாண் மைக்குழு உறுதி செய்தல் வேண்டும். பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில், தேர்வு நேரம் முடிந்தவுடன் அன்று மதியமே தேர்விற்கு வராத மாணவர்களின் விவரங்கள் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரால் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்த மாணவர்கள் சார்ந்த விவரங்களை அறிந்து கொண்டு உடனே அடுத்து வரும் தேர்விற்கு மாணவர்கள் தவறாது வருகைப் புரிவதை தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வட்டார மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொதுத் தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கான ஆலோசனைகளை தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பெற்றோர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் பட்டியலை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பெற்று , அந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் துணைத் தேர்விற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து தேர்வு எழுத வைக்க வேண்டும். மேலும் கூடுதல் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் சார்ந்த மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்போடு பிற துறைகளின் பங்களிப்பை பெறுதல் வேண்டும். துணைத் தேர்வு குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் சத்தேகங்களை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள 14417 இலவச உதவி மைய எண் பயன்படுத்தலாம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

எல்லாம் ரெடியா...? வரும் 19-ம் இவர்கள் அனைவருக்கும் தேர்வு...! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!

Sat Mar 18 , 2023
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படித்தவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இது குறித்து பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. […]
’எங்கள் ஆட்சியில் வேட்டியை யாராலும் கழட்ட முடியாது’..! அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேச்சு..!

You May Like