fbpx

நடிகையை கர்ப்பமாக்கி வாழ்க்கையை சீரழித்த இயக்குனர்..!! பரபரப்பை கிளப்பிய பூனம் கவுர்..!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் பிரபல நடிகை பூனம் கவுர், நடிகையை கர்ப்பமாக்கி அவரது வாழ்க்கையை நாசமாக்கிய இயக்குநர் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள் என கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூனம் கவுர். இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர் ஒருவர், நடிகையை கர்ப்பமாக்கி, அவரது வாழ்க்கையை நாசம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரில் நடிகை பூனம் கவுர் நடிகையின் பெயரையோ, இயக்குனரின் பெயரையோ குறிப்பிடாமல், இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அனைவருக்கும் தெரியும் என்றாலும், ஏன் அந்த இயக்குநர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை..? எப்போது எடுப்பீர்கள்..? என்று ஆவேசமாக கேட்டுள்ளார்.

இதற்கு முன்பு நடிகை பூனம் கவுர் தெலுங்கின் முன்னணி இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸ் மீதும் தெலுங்கு சினிமா நடிகர் பவர் ஸ்டார் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அப்போது இவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேட்டிகளையும் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருந்தார். தற்போது, “நடிகையை கர்ப்பமாக்கி நாசம் செய்து, பின்னர் கருச்சிதைவை ஏற்படுத்தி அவரின் வாழ்க்கையையே நாசம் செய்தவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அதே சமயம் அந்த நபர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார். “அந்த பஞ்சாபி நடிகைக்கு உதவ தெலுங்கு சினிமா நடிகர்கள் சங்கமான (மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்) முயற்சித்தது. எனது பெயரும், நடிகரும், அரசியல்வாதியான அவரும் அரசியல் உள்நோக்கத்துக்காக தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளனர்” என்று நடிகை பூனம் கவுர் குறிப்பிட்டுள்ளார்.

Read More : சென்னைக்கு மிக கனமழை அலர்ட்..!! தமிழ்நாடு முழுவதுமே தரமான சம்பவம் இருக்கு..!! தேதி குறித்த வானிலை மையம்..!!

English Summary

Popular actress Poonam Kaur, who is acting in Tamil and Telugu film industry, has created a stir by asking when will action be taken against the director who made the actress pregnant and ruined her life.

Chella

Next Post

பகீர்.. 4 ஆண்டுகளாக பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை..!!

Fri Oct 11 , 2024
You will be shocked to know that here a man raped his own daughter for more than four years. The police have registered a case in this regard and started searching for the 40-year-old accused.

You May Like